இலங்கை

கோவிட் 19 வெற்றியை கொண்டாடும் தருணம் அல்ல இது!

இலங்கையில் COVID-19 தொடர்பாக   வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் நாட்டில் COVID-19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.

அத்துடன், இது COVID-19 தொடர்பாக நாம் வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமல்ல. ஜெர்மனி, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். இந்நாடுகளில் தொற்றுக்குள்ளானோர் மீண்டும் பதிவாகும் நிலை உருவாகியுள்ளது.

எம்மை விட பாரியளவில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படாத காரணத்தாலேயே அங்கு தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே எவரேனும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தால், அவர்கள் விமான நிலையத்திற்கு வந்த உடனேயே தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்துவதே சிறந்தது.

அத்துடன் சமூகத்தில் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும்  கைகளை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாடு ஆகிய அந்த மூன்று சட்டங்களையும் மக்கள் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே பூரணமாக இல்லாதொழிக்க முடியும் என்றார்.

கருத்து தெரிவிக்க