உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் சோதனை சாவடிகள்

அண்மை நாட்களாக வடக்கின் பல மாவட்டங்களிலும் ராணுவத்தினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ராணுவத்தினர் சில இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது

அந்தவகையில் மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் ராணுவத்தினர் சோதனை சாவடிகளை அமைத்து செல்கின்ற வாகனங்கள் மற்றும் மக்களை சோதனைக்குட்படுத்தி வருவதோடு முல்லைத்தீவு பரந்தன் வீதியிலும் ராணுவத்தினர் சோதனை சாவடிகளை அமைத்து இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுவந்த நிலையில் வடக்கில் அவை தளர்த்தப்பட்டிருந்தன இந்நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க