உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கல்- சஜித்

2015ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தொடர்பான ஆணையை நிறைவேற்றப்போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நாடு பாதுகாக்கப்படும் என்றும் சஜித் குறிப்பிட்டார்.

அத்துடன் தேர்தலுக்காக எந்த கட்சியுடனும் உடன்படிக்கைக்கு செல்லப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க