உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு அபராதம்

மஸ்கெலிய  பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை பகுதியில்  மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய நபர் ஒருவருக்கு  அட்டன் மாவட்ட நீதிபதியால் இருபத்தைந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 22/9/2019 இரவு 7 மணியளவில்  சாமிமலை பகுதியில் இருந்து மஸ்கெலிய நோக்கி    சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை  மஸ்கெலிய  பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் சோதனைக்குற்படுத்திய போது குறித்த முச்சக்கர வண்டி சாரதியை   சந்தேகத்தின்  பேரில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது முச்சக்கர வண்டியின் சாரதி மது அருந்தியிருந்தது  மஸ்கெலிய பிரதேச வைத்திய அதிகாரியால் ஊர்ஜிதப்படுத்தபட்டதை தொடர்ந்து  முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது .

மேலு‌ம்  அன்றைய தினம் பொலிஸ் பினையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த நபர் நேற்று  (25)  அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபட்ட போது  குற்றவாளிக்கு  25 ,000/_ ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டதுடன் குறித்த நபரின் சாரதி அனுமதி பத்திரமும்  ஒரு மாத காலம் வரை  இரத்து செய்யப்பட்டது.

( நிருபர் –  ஞனராஜ் )

கருத்து தெரிவிக்க