உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மன்றாடியார் நாயகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்க பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவென்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவனப்பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொதுச்சேவைகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஸாஹரா ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

எனினும் தம்மீதான குற்றச்சாட்டை தில்ருக்ஸி மறுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க