உள்நாட்டு செய்திகள்புதியவை

போரின்போது செயலிழந்த படையினருக்கு வாழ்நாள் வேதனம்

போரின்போது செயலிழந்த படைவீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த கொடுப்பனவுகள் முப்படைகளிலும் சேவையாற்றி செயலிழந்தவர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின்போது செயலிழந்த படையினர் கடந்த 14நாட்களாக கொழும்பு ரயில்வே நிலையத்தின் முன்னால் நடத்தி வரும் போராட்டத்தின் பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க