உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

வெள்ள நிவாரணங்களுக்கு படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள்- ஜனாதிபதி

வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றவும் நிவாரணங்களை வழங்கவும் படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்தப்பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு குறித்த அமைச்சுக்களின் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க