உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இளைஞர் யுவதிகளிற்கான நிறுவனம் சார் கல்வி நிலையம் திறந்து வைப்பு

23 வருடங்களிற்கு பின் கையளிக்கப்பட்ட நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளிற்கான நிறுவனம் சார் கல்வி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

க.சிவசிதம்பரம் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட இவ் இலவச கல்வி நிறுவனத்தின் பெயர் பலகையினை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார்.

கட்டிடத்தினை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா அவர்கள் நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்.

மேலும், கணணி அறையினை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்.

நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவசிதம்பரம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க