உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கரு ஜயசூரியவை சபையில் ஜனாதிபதியாக்கிய தயாசிறி!

சபாநாயகர் கருஜயசூரியவை ‘அதிமேதகு ஜனாதிபதி அவர்களே’ என்று  சபையில் இன்று விளித்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது எழுந்த தயாசிறி ஜயசேகர, தனது வினாவை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் தொடுப்பதற்கு முன்னர்,

‘ அதிமேதகு ஜனாதிபதி அவர்களே’ என சபாநாயகரை அழித்தார். மறுநொடியே மன்னிக்கவும் சபாநாயகரே என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், இது நகைப்புக்குரிய விடயமல்ல. அதிஉயர் சபையில் கௌரவமாக நடத்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்.

 

 

கருத்து தெரிவிக்க