உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

அரசியலில் திடீர் திருப்பம் – அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அவசரமாக அமைச்சரவைக் கூட்டப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
அத்துடன், அங்கவீனமான முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அமைச்சரவைக் கூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க