உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அலரி விதையினைச் சாப்பிட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவர் உயிரிழப்பு

மூதூர்கிழக்கில் பாட்டாளிபுரம் கிராமத்தில் வசிக்கும் சஞ்சீவி குடும்பம் ஆறு பிள்ளைகளைக் கொண்டது.

தாயும் தந்தையும் பிச்சையெடுக்கச் செல்லும் நிலையில் வறுமையில் வாழ்பவர்கள் நேற்றைய தினம் இவர்களது பெறமகனான ( மனைவியின் தங்கையின் மகன் )விக்கினேஸ்வரன் ரூபன் வயது 17. அலரி விதையினைச் சாப்பிட்ட நிலையில் அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து அவரது தங்கையான சஞ்சீவி ஜெயசுதா (வயது16)என்பவரும் அலரி விதையினைச் சாப்பிட்ட நிலையில் பாட்டாளிபுரம் வைத்திய சாலை நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் மூதூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சஞ்சீவி ஜெயசுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் சகோதரரான வி.ரூபன் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவர்கள் எதற்காக அலரி விதையினைச் சாப்பிட்டார்கள் என்பது தொடர்பில் தெளிவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பூர் போலீசார் தீவிர விசாரனைகளை மேற் கொண்டு
வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க