உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நுவரெலியா மாவட்ட வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 18.09.2019 அன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையிலான 24 மணித்தியாலயங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 18.09.2019 அன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க