உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்தக்கோரும் ஆவணம் சிங்கப்பூரிடம் கையளிப்பு

மத்திய வங்கி முறிவிற்பனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துமாறு கோரப்பட்ட ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்கள பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

21000 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் உயர்ஸ்தானிகரத்திடம் கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்டர்போலின் ஊடாக அவரை கைதுசெய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இந்தக் கோரிக்கை ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டார்.

கருத்து தெரிவிக்க