உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘2019 சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 20 ஆம் திகதி’

2019 சர்வதேச புத்தக கண்காட்சி இம் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21 ஆவது முறையாக இதை ஏற்பாடு செய்துள்ளது. இது ஆசியாவிலேயே வெற்றிகரமான புத்தக கண்காட்சியாக கருதப்படுகின்றது.

417 உள்நாட்டு வெளிநாட்டு காட்சி கூடங்கள் இதில் இடம்பெறவுள்ளது.

இதில் இந்தியா, சீனா, மலேசியா, பிரிட்டன், ஈரான் போன்ற பல நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.

[ அரச செய்தி திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க