உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி

அரசாங்கத்தின் 33.9 மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை என்ற காரணத்தை அடிப்படையாகக்கொண்டு, சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியது.

அத்துடன் நீதிமன்றத்திடம் உள்ள அவரது பயணத்துக்கான ஆவணங்களை கையளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி கோட்டாபய மே15 முதல் 19ஆம் திகதி சிங்கப்பூருக்கு செல்லவுள்ளார்.

கருத்து தெரிவிக்க