உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டனர். அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர்- காவல்துறை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார்கள். அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த தகவலை, பதில் காவல்துறை மா அதிபர் சிடி விக்கிரமரத்ன வெளியிட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில், குண்டு தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த இருவரும் அடங்குவதாக அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்துச்செல்லப்படும் என்றும் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க