உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வழமைபோல் வடமாகாணத்தில் கல்வி நடவடிக்கை நடைபெறும்

வட மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) பாடசாலைகள் எதுவும் இயங்காது என்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது தொடர்பில் கௌரவ ஆளுநரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையானதல்ல எனவும் வடமாகாணத்தின் சகல பாடசாலைகளும் திங்கட்கிழமை  வழமைபோல்  இயங்குமெனவும் வட மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
[வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு]

கருத்து தெரிவிக்க