உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அனுமதி இன்றி மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நடுத்தீவு பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச்சென்ற இளைஞர் ஒருவரை தாம் கைதுசெய்தாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் மூதூர் -2 நடுத்தீவு பிரதேசத்தைச்சேர்ந்த 21 வயதுதுடையவர் எனவும் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிச்சென்ற டிரக்ட்டர் வாகனத்தையும் மூதூர் பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பைசல் நகர் பிரதேசத்தில் பலாபள்ளி எனும் இடத்திலும் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச்சென்ற 22 வயது இளைஞரையும் தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட நபர், கிண்ணியா-3 பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்றும் கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றபட்ட டிரக்டரையும் கிண்ணியா பொலிஸ் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க