உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புல்மோட்டை சூட்டுச்சம்பவம்; கடற்படை அதிகாரிகள் இருவர் உட்பட 12 கடற்படையினர் கைது!

திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் [28.08.2019] அன்று அதிகாலையில் கடற்படையினரின் உத்தரவை மீறீச்செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் தொடர்பாக
புல்மோட்டையைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த நான்கு மீனவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதமன்றத்தில் நேற்று இடம்பெற்றபோது, தாக்குதலில் ஈடுபட்டார்கள் என குற்றச்சாட்டப்பட்ட கடற்படையினர் நீதிமன்றில் பிரசன்னமாயிருந்தனர்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்ற பிரதம நீதிவான் எம்.எச்.எம்.ஹம்சா சந்தேக நபர்களான இரு அதிகாரிகள் மற்றும் பத்து சிப்பாய்களையும் எதிர்வரும் 16 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க