உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

JMI அமைப்பின் 11 உறுப்பினர்கள் TID இடம் ஒப்படைப்பு

அம்பாறையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களே மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க