உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சாமிமலை பாக்றோ தோட்டத்தில் தீ பரவல்

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை பாக்றோ தோட்டத்தில்  வீடொன்றில் ஏற்ப்பட்ட தீ  அனர்த்தத்தில்  இரண்டு குடும்பங்களை சேர்ந்த பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல்   3  மணியளவில் குறித்த வீட்டில் இருந்து  தீ பரவுவதை கண்ட அயலவர்கள்  சத்தமிட்டதாகவும்   அதன் பின்னர்  தோட்ட இளைஞர்களால்  தீ பரவலை கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வந்ததாகவும்  தீ  பரவும்போது  குறித்த வீட்டில்  இருந்தவர்கள் கீழே  உள்ள வீட்டில் இருந்ததாகவும் அயலவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீடு கீழே சீமெந்து சுவரினாலும்  மேல் தட்டு  பலகையினாலும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பலகையினால் அமைக்கப்பட்ட மேல் பகுதியே இவ்வாறு தீ அனர்த்தத்துக்குள்ளாகியுள்ளது .

குறித்த  வீட்டில் இருந்த கனனி உபகரனம்  வீட்டு தளபாடங்கள் போன்றவை  இந்த அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள்  உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவலுக்கான மேலதிக விசாரணைகளை  மஸ்கெலிய பொலிசார்  முன்னெடுத்துள்ளனர் .

கருத்து தெரிவிக்க