உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தேரில் வலம் வந்த நரசிங்கபெருமான்!!

வவுனியா – பூந்தோட்டம், அருள்மிகு ஶ்ரீ லஷ்மிசமேத நரசிங்கர் ஆலய  மகோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றைய தினம் தேர்திருவிழா நடபெற்றது.
வரலாற்றுசிறப்புமிக்க வவுனியா நகரில் பூந்தோட்டம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளிவழங்குகின்ற ஶ்ரீ லஷ்மிசமேத நரசிங்க பெருமானுக்கு மகோற்சவபெருவிழா கடந்தவாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 10 நாட்கள் நடபெறவுள்ளநிலையில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை ஒன்பதாம் திருவிழாநாளில்  தேர்த்திருவிழா மிக்கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றயதினம் , தீர்த்தோற்சவம் நடபெற்று மகோற்சவபெருவிழா விஞ்ஞாபனம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க