உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம் இன்று செட்டிகுளத்தில் அனுஷ்டிப்பு

தேசிய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு  இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம்  இன்று வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் மற்றும் இந்து சமய அறநெறிக் கல்வி – கொடி தினம் என்பன செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை “பூரணத்துவமான ஆளுமைப் பண்புக்கு அடிப்படை அறநெறிக் கல்வியே! ” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு  வருகின்றது.
வெங்கலச் செட்டிகுளம்  பஜார் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரதேச செயலகம் வரை அறநெறி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலம் இடம்பெற்றது.
 பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் கை.சிவகரன் அவர்களினால்  நந்தி கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனை தொடந்து அறநெறி கீதம் இடம்பெற்றதுடன் பிரதேச செயலாளரினால் அறநெறி கல்வியின் முக்கியத்துவம்  பற்றிய  உரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் k.முகுந்தன் திட்டமிடல் பணிப்பாளர்எஸ்.சண்முகநாதன் இந்து கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு கலாசார உத்தியோகத்தர் ரா.பிறிஸ்கா அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆலய பரிபாலன சபையினர் கலந்து கொண்டிருந்தனர்

கருத்து தெரிவிக்க