உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஓமந்தை தொடருந்து கடவைக்கு பாதுகாப்பு வேலி அமைப்பு

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவைக்கு பாதுகாப்பு கடவை புதிதாக அமைக்கப்பட்டு ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பில் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தின் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அமைக்கப்பட்ட பாதுகாப்புக்கடவை இன்று காலை 10மணியளவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்த டி சில்வா, தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பிர் திருமதி அஞ்சலா கோகிலகுமார், கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க