உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பறிபோகிறது கபீர் ஹாசிமின் பதவி – ரணில் அதிரடி!

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து சஜித் ஆதரவு அணி உறுப்பினரான கபீர் ஹாசிம் நீக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கடிதம் இன்று அல்லது நாளை கபீர் ஹாசீமுக்கு அனுப்பிவைக்கப்படலாம் என்றும், ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

ஐ.தே.கவில் உயர் பதவியை வகித்துக்கொண்டு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சிக்கு துணைபோனார் என இவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டங்களில் கட்சி தலைமையின் உத்தரவையும்மீறி கபீர் ஹாசீம் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க