உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கற்றல் வள நிலையம் சிவமோகன் எம்பியால் திறந்து வைப்பு

வவுனியா சைவ பிரகாசா ஆரம்ப பாடசாலையில் கற்றல் வள நிலையம் இன்றையதினம்  திறந்து வைக்கபட்டது.
பண்பு, அறிவு,மற்றும் வலுமிக்க மனித நேய மாணவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சால் நடைமுறைப்படுத்தபட்டுவரும் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற தேசிய  கருத்திட்டத்தின் கீழ் அமைச்சினுடைய 17 மில்லியன் நிதி மூலம்  நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடிகள் கொண்ட கற்றல் வளநிலையம் வவுனியா சைவபிரகாசா ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் திறந்துவைக்கபட்டது.
அதிபர் தியாகசோதி யுவராஜா தலைமயில் இடம்பெற்ற  நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்டடத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் வலயகல்வி அதிகாரி மு.இராதகிருஸ்ணன், பிரதிகல்வி பணிப்பாளர்களான சு.அமிர்தலிங்கம், பா.பாலசந்திரன், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க