உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கம்பஹா மாவட்டத்தில் 18 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மற்றும் களனி ஆகிய பகுதிகளில் நாளை (10) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி ஆற்றின் தெற்குக் கரையில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் புதிய குழாய் கட்டமைப்பு இணைக்கப்படுவதால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, மஹர, கம்பஹா ஆகிய பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க