உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உயிருக்கு போராடிய மூவரின் உயிர்களை காப்பாற்றிய இராணுவத்தினர்

கிளிநொச்சி- பூநகாி அரசபுறக்குளத்தில் நீராட சென்று சேற்றில் புதையுண்ட நிலையில் உயிருக்கு போராடிய மூன்று பேரை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

கருத்து தெரிவிக்க