உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிற்றுந்து விபத்தில் வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழப்பு

அனுராதபுரம் – கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் நேற்று இரவு சிற்றுந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தென்னமரவடியில் ஆலயமொன்றின் கும்பாபிஷேக நிகழ்விற்கு வவுனியா புதுக்குளத்தில் இருந்து சிற்றுந்தொன்றில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சிற்றுந்தின் முன் பக்க டயரில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக சிற்றுந்து தடம்புரண்டுள்ளது.

பின்னர் சிற்றுந்தில் பயணித்தவர்கள் வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

குறித்த விபத்தில் வவுனியா புதுக்குளத்தினை சேர்ந்த ப. சோதிமலர் என்ற வயோதிப பெண் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பிட்டிக்கொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க