உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ முன்வைத்த காலை இனி பின்வைக்கமாட்டேன்’ – சஜித் சபதம்!

” முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன். ஜனாதிபதி தேர்தலில் கட்டாயம் களமிறங்குவேன்.”  – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களால் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது உரையாற்றிய சஜித்,

” குறுக்கு வழியில் பிரதமராவது எனது நோக்கம் அல்ல.  பிரதமர்  பதவியை ஏற்குமாறு 71 தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், கட்சிமீதும், கட்சி தலைமைமீதும் வைத்திருந்த விசுவாசம் மற்றும்  நம்பிக்கையால் நான் எதையும் ஏற்கவில்லை.

ஆனால், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். இறுதிநேரத்தில் பின்வாங்கிவிடலாம் என சிலர் கருதுகின்றனர். ஒருபோதும் முன்வைத்த காலை பின்வாங்கமாட்டேன் என்ற உறுதிமொழியை வழங்கிகுகின்றேன்.” என்றார்.

கருத்து தெரிவிக்க