உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நாவலப்பிட்டி தோட்டம் ஒன்றில் தீ பரவல்

நாவலப்பிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்ட பகுதியில் உள்ள லைன் குடியிருப்பு ஒன்றில் இன்று தீப்பரவல் இடம் பெற்றுள்ளது.

பத்து குடியிருப்புகளை கொண்ட லைன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு மாத்திரம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளதோடு, ஏனைய ஒன்பது குடியிருப்புகளுக்கும், தீ பரவாமல் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க