உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜே.வி.பியின் ஆட்டம் நாளை அநுராதபுரத்தில் ஆரம்பம்

ஜனாதிபதி  தேர்தலை இலக்குவைத்து முதலாவது பரப்புரைக் கூட்டத்தை நாளை (07) அநுராதபுரத்தில் நடத்துவதற்கு ‘தேசிய மக்கள் சக்தி’ தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது.

இதன் முதலாவது கூட்டமே நாளை அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது என்றும் அதன்பின்னர் ஏனைய பகுதிகளிலும் நடைபெறும் என்றும் ஜே.வி.பியின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

கருத்து தெரிவிக்க