உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவை கலந்துரையாடல்

போர்க்குற்ற விசாரணையை நடாத்து,அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019ம் திகதி (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக வவுனியா பொது அமைப்புக்கள் உடனான சந்திப்பொன்று இன்றயதினம் வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் பேரவை மற்றும்,அதன் அங்கத்துவ கட்சிகளினதும் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா,இ,இந்திரராஜா,நகரசபை தலைவர் இ,கௌதமன்,தமிழ்மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சிறிதரன், மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.

Virus-free. www.avast.com

கருத்து தெரிவிக்க