உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ்ப்பாண மாநகர நகர நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்.

யாழ்ப்பாண மாநகர நகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமரால் யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலேயே குறித்த அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட்து.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகர மண்டபத்திற்கான ‘அடிக்கல் நாட்டுதல்’ நிகழ்வு மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாறு அமையவுள்ள குறித்த மாநகரத்திற்கான மண்டபத்திற்காக 2019ம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க