உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போரின் போது தமிழ்நாட்டிற்கு குடியேறிய அகதிகள் மீண்டும் நாடு திரும்பினர்

போரின்போது மன்னார் பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக குடியேறிய அகதிகள் குழு நேற்று (05) மீண்டும் நாடு திரும்பினர்.

சிறை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அவர்களை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளன.

குறித்த இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்க்கு நேற்று வந்தடைந்தனர்.

27 பேர் அடங்கிய இந்த குழுவில் 11 பெண்கள், 10 ஆண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் அடங்குவர்.

அவர்கள் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் திருகோணமலையில் வசித்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்கள் மீண்டும் தமது கிராமங்களுக்கு சென்றடைய தீர்மானித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க