உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கோட்டாவையே கவனிக்கும் காவல்துறை- மஹிந்த குற்றச்சாட்டு

குற்றப்புலனாய்வு துறையினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தாமல் கோட்டாபய தொடர்பில் கவனம் செலுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த அவர், கடவுச்சீட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர் கோட்டாபயனவின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீது பழிவாங்கல்களை மேற்கொள்கிறது.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான பொறுப்பை ஏற்காமல் மற்றவர் மீது குற்றச்சாட்டை சுமத்துகிறது என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க