உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கோத்தபாயவின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் முக்கிய நபர்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் வழிநடத்திச் செல்லப்படும் வியத் மக அமைப்பின் இளைஞர் மாநாடு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெறவிருக்கும் மாநாடிட்கு உலகின் தலைசிறந்த முன்னாள் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் அழைக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கோத்தபாயவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தொழிற்சங்கள், அமைப்புகளுடன் ராஜபக்ஷர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனை தம்மோடு இணைத்துக் கொள்வதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என ராஜபக்ஷர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க