உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று நாடு திரும்பினார்

மாலைத்தீவுக்கான உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பினார்.

மூன்றுநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு சென்ற பிரதமர் மாலைத்தீவுடன் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், நேற்றையதினம் மாலைத்தீவு பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார்.

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலியின் அழைப்பை ஏற்று மாலைத்தீவு சென்ற பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

பிரதமருடன் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயா கமமே, அனோமா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் மலேசியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க