உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

குப்பைகளை எடுத்து செல்ல எதிர்ப்பவர்களுக்கு; நீதிமன்றத்தின் உத்தரவு!

அருவக்காட்டுக்கு குப்பை எடுத்துச்செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயற்பாட்டை தடைசெய்து புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தளம் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் முன்வைத்த அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அருவக்காட்டுக்கு குப்பைகளை எடுத்துச்செல்லும் லொறிகள் மற்றும் பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் ஜீப் வண்டிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த செயற்பாடானது பிரதேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனிவரும் காலங்களில் கழிவுகளை எடுத்துச்செல்வதற்கு எதிர்ப்புதெரிவித்து பிரதான வீதிகள் மற்றும் ரயில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களையும், வாகனங்கள் மீது தாக்குதல்களையும் மேற்கொள்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க