உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வைத்தியசாலைகளில் எந்தவொரு மருத்து தட்டுப்பாடும் இல்லை

வைத்தியசாலைகளில் எந்தவொரு மருத்து தட்டுப்பாடும் இல்லையென வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் ஏ.டி.சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கருத்தை மேற்கோள்காட்டி மத்திய மருந்து களஞ்சியசாலையில் தட்டுப்பாடு காணப்படுவதாக செய்திகள் வெளியாயிருந்தன.

எனினும் அதில் எவ்வித உண்மையுமில்லையென மருத்துவ விநியோக பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

மருந்துகள் குறிப்பிட்ட காலஅட்டவணைக்கமையவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

தேவைக்கேற்ப மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது.

மருந்து தட்டுப்பாடு காணப்படுமாயின், தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கென வைத்தியசாலை பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் ஏ.டி.சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க