உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘விரைவில் அரசியல் புரட்சி – 2020 இல் சு.க. ஆட்சி’

” அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில்.” – என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்சியின் 68 ஆவது ஆண்டு மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றுவருகின்றது.
 
இம்மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
 
”பிரதேசசபை முதல் அதிஉயர் சபையான நாடாளுமன்றம்வரை ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.
 
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில்.
அவர் மட்டுமல்ல பிணைமுறி மோசடி தொடர்பில் பொறுப்புகூறவேண்டியவர்களும் நீதிமன்றம் செல்லவேண்டிவரும்.
 
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும். மாவட்டம் தோறும் மகாநாடு நடத்தப்படும். 2020 இல் சுதந்திரக்கட்சி ஆட்சி மலரும். அதற்காக விரைவில் அரசியல் புரட்சி செய்வோம்.” என்றும் கூறினார்.

கருத்து தெரிவிக்க