உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

” விழ விழ எழுவோம் – வீறுநடை போடுவோம்’

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழிந்துவிடும். அதன் இறுதிப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. எப்படிதான் வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி சுதந்திரக்கட்சிக்கு இருக்கின்றது. அக்கட்சியை எவரும் குழிதோண்டி புதைக்க முடியாது.”
-இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் 68 ஆவது ஆண்டு மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றுவருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
” ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களால் 47 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறமுடியாது. எனவே, சுதந்திரக்கட்சிதான் தீர்மானிக்கும் சக்தி என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். 
இனிதான் சுதந்திரக்கட்சியின் அதிரடி ஆரம்பமாகும். தொகுதிவாரியாக கூட்டங்கள் நடத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க