உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா கனகராயன்குளத்தில் குண்டுகள் மீட்பு

வவுனியா கனகராயன்குளத்தில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் முதுரங்குளத்தில் பயன்பாடற்ற காணியொன்றில் ஆடகளுக்காக புல் வெட்ட சென்ற ஒருவரே குண்டுகள் காணப்படுவதானை அவதானித்து கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு மண்ணினுள் புதையுண்ணட நிலையில் சுமார் 15 மோட்டார் குண்டுகளையும் ஒரு கைக்குண்டையும்; அவதானித்த நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் செயற்பாட்டிற்காக விசேட அதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விசேட அதிகரடிப்படையினர் பொலிஸார் ஊடாக நீதுpமன்ற உத்தரவை பெற்று குறித்த பகுதியில் அகழ்வுப்பணியை மேற்கொண்டு குண்டுகளை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அதனை செயலிழக்க செய்யும்   செயற்பாட்டினையம் விசேட அதிகரடிப்படையினர் மேற்கொள்ளவுள்ளனதுடன் குறித்த குண்டுகள்நீண்ட காலமாக மண்ணில் புதையுண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
குண்டுகள் காணப்பட்ட பகுதியில் வெற்று மதுபான போத்தல்களும் அதிகமாக காணப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க