உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோதமான முறையில் மாடுகளைக்கடத்திய இருவர் கைது

வாழைச்சேனையிலிருந்து கல்முளைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறியையும் மீட்டுள்ளனர்.

இன்று(2) காலை காத்தான்குடி பிரதான வீதியில் கடமையிலிருந்த பொலிசார் வீதிச்சோதனையின்போது குறித்த லொறியை மடக்கிப்பிடித்தனர்.

குறித்த லொறியில் 12 மாடுகள அடைத்து சட்டவிரோதமான முiறையில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்தக விஜேசிங்க தலைமையிலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபர்களையும் மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

கருத்து தெரிவிக்க