உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவுக்குள் மோதல் உக்கிரம்! கட்சி மாநாடும் ஒத்திவைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிப்பதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக் கட்சி உதயமாகியது. இதனால் அக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 6 அல்லது அதனை அண்மித்த ஓர் தினத்திலேயே நடைபெற்றுவந்தது.

எனினும், இம்முறை மாநாட்டை நடத்துவதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

எனவே, இம்முறை 6 ஆம் திகதி மாநாடு நடைபெறாது என்றும், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்றும் மேற்படி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாக பிளவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க