உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கண்ணீருடன் கேட்கிறோம். பிரதமரே எங்களை வாழ அனுமதியுங்கள்

அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் பிரியா- நடேசலிங்கம் குடும்பத்தினர் அந்த நாட்டு பிரதமரிடம் கருணைமிக்க கோரிக்கையை விடுத்துள்ளனர்.

“அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்த எங்களை உங்களது நாட்டில் வாழவிடுங்கள்” என்று கண்ணீருடன் கேட்பதாக பிரியா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வானொலி ஒன்று கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருடன் தொடர்புகொண்டபோதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

பல வருட சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கடந்த வாரம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டபோதும் இவர்களை இடையில் வைத்து நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு போய் சேர்தது.

இதனையடுத்து பிரியா- நடேஸ் குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க