உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தலைவர் பதவியிலிருந்து ரணில் நீக்கம் – யோசனை நிறைவேற்றம்!

களனி ரஜமஹா விகாரையின் நிர்வாக சபை தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விகாரையின் நிர்வாக சபைக் கூட்டம் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க ரக்கித்த தலைமையில் இன்று (01) கூடியது.

இதன்போது நிர்வாக சபையின் தலைவரை நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏழுபேர் மட்டுமே யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

நிர்வாக சபையால் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனை, விகாரையின் நிறைவேற்றுக்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.

 

கருத்து தெரிவிக்க