உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

காட்மோர் பிரதான பாதையில் விபத்து

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குற்ப்பட்ட காட்மோர் பிரதான சாலையில் நேற்று காலை 11 மணியளவில் (30/8/2019) ஏற்பட்ட விபத்தில்  இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து  காட்மோருக்கு சென்ற இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான டிபர் வாகனம் ஒன்றும்  காட்மோர் பகுதியில் இருந்து மஸ்கெலியாவை நோக்கி சென்ற வேன் ஒன்றும்  நேருக்கு நேர் மோதியதனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அவ்வழியான போக்குவரத்து  சில மணிநேரம் ஸ்தம்பித்தது.

இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸ் பிரிவின்ர்   முன்னெடுத்துள்ளனர் .

கருத்து தெரிவிக்க