உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல்: இன்டல்போல் 33 அறிக்கைகளை தயாரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொரணல் உட்பட்ட 33 அறிக்கைகளை சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல் தயாரித்துள்ளது.

இந்த அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று இன்டர்போலின் செயலாளர் ஜெர்கன் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிய 1836 சாட்சியங்கள் மற்றும் தடயங்களைக் கொண்டு இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக இலங்கையின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தாம் பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளதாக ஜேர்கன் ஸ்டொக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க