விளையாட்டு செய்திகள்

‘டோனியை புறக்கணித்தல் என்று வார்த்தைக்கே இடமில்லை’

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியை புறக்கணித்தல் என்பதற்கே இடமில்லை என இந்திய அணியின் தெரிவுக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான ரி 20 அணியில் டோனி இடம்பெறாததை தொடர்ந்து அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வருகின்றதா என கேள்வி எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ரி20 உலககிண்ண போட்டிகளிற்கான இந்திய அணியை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை டோனி வழங்கியுள்ளார்.

இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது என்பது தெளிவான பின்னரே தனது எதிர்காலம் குறித்த முடிவை எடுப்பேன் என டோனி உறுதியளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி போதுமான விக்கெட் காப்பாளர் பலத்தை கொண்டுள்ளது என்பது தெளிவான பின்னரே டோனி தனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க